மேலும்

சிறிலங்காவின் புதிய காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர

Pujitha Jayasundaraசிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார். அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் இவரை பெயரை சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

சிறிலங்கா காவல்துறை மா அதிபராக இருந்த இலங்ககோன் ஓய்வு பெற்றதையடுத்தே, அந்த இடத்துக்கு பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு, பிரதி காவல்துறை மா அதிபர்களான எஸ்.எம்.விக்கிரமசிங்க, பூஜித ஜெயசுந்தர, சந்தன விக்கிரமரத்ன ஆகிய மூவரில் ஒருவரது பெயரைப் பரிந்துரைக்குமாறு அரசியலமைப்பு சபையிடம் சிறிலங்கா அதிபர் கோரியிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று மாலை மூவரையும், நேர்காணல் நடத்திய அரசியலமைப்பு சபை, பூஜித ஜெயசுந்தரவை காவல்துறை மா அதிபர் பதவிக்கு நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *