மேலும்

சிறிலங்காவில் நல்லிணக்கம், நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும்- ரொம் மாலினோவ்ஸ்கி

Tom-Malinowskiசிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்காக உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று, நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகள்-2015 அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட கூட்டுத் தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் நீதியை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று ரொம் மாலினோவ்ஸ்கி குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகள்-2015 அறிக்கையை, ரொம் மாலினோவ்ஸ்கி தலைமையிலான ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்காக பணியகமே தயாரித்திருந்தது.

உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு பலமுறை பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *