ரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன்களைப் பெறுவது பேச்சுக்களில், சிறிலங்கா பிரதமர் சீனாவில் இருந்து நாடு திரும்பியதும், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில், நடைபெறும் ஆசிய முதலீட்டுக் கருத்தரங்கில் பேசிய அவர்,
அனைத்துலக நாணய நிதியத்திடம் கடன் பெறுவது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக சிறிலங்காவில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
சீனாவில் இருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியது பேச்சுக்கள் நடத்தப்பட்டு இறுதியான முடிவு எடுக்கப்படும். இந்தப் பேச்சுக்கள் வரும் திங்கட்கிழமை நிறைவடையும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.