மேலும் ஒரு இராஜாங்க அமைச்சர், இரு பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக இரண்டு பிரதி அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றனர்.
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவாரப்பெரும- உள்நாட்டு விவகார, வயம்ப அபிவிருத்தி, கலாசார விவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான- மனுச நாணயக்கார- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதிஅமைச்சராகவும், லக்ஸ்மன் செனிவிரத்ன- விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.