மேலும்

சிறிலங்காவுடன் உடன்பாடுகள் கையெழுத்திடப்படுமா? – மெளனம் காக்கும் சீனா

Srilanka-chinaசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதிலும், அதுபற்றி சீனா அதுபற்றி மௌனம் காத்து வருகிறது.

நாளை முதல், வரும் 9ஆம் நாள் வரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, சீனாவின் அதிபர், பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடவுள்ளதாக, சிறிலங்கா பிரதமரின் செயலகம் அறிவித்திருந்தது.

ஆனால், சிறிலங்கா பிரதமரின் பயணத்தின் போது எந்த வகையான உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீயிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார்.

இந்தக் கேள்விக்கு அவர், “சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரை சீனத் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

சீனாவும், சிறிலங்காவும், பாரம்பரிய நட்புறவு கொண்ட அயல் நாடுகள். பரஸ்பரம் நன்மையளிக்கும், ஒத்துழைப்பு இருதரப்புக்கும், நன்மையளிப்பதாக இருந்துள்ளது.

பாரம்பரிய நட்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, நாம் விரும்புகிறோம்.

சீனா- சிறிலங்கா மூலோபாய ஒத்துழைப்புக் கூட்டை நேர்மையுடன், பரஸ்பர உதவி மற்றும் நீண்டகால நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.” என்றும் மட்டும் அவர் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *