மேலும்

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்களை பதிவு செய்கிறது பரணகம ஆணைக்குழு

Missing-commissionகாணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு இன்று முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் அமர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முல்லைத்தீவில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்று ஆணைக்குழுவின் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் சாட்சியப் பதிவுகள் முடிவுற்றதும், அடுத்து வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் தொடர்ந்து ஆறு நாட்கள் நடத்தப்படவுள்ள இந்த அமர்வில் வாய்மூல சாட்சியமளிக்குமாறு 1600 முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *