சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது பின்னரே முடிவு செய்யப்படும்.