மேலும்

வெள்ளை யானைகளை கறுப்பு யானைகளாக மாற்றப்போகிறதாம் சிறிலங்கா

malik samarawickramaமுன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வெள்ளை யானை திட்டங்கள், அதிகம் இலாபமீட்டத்தக்கவையாக மாற்றியமைக்கப்படவுள்ளன என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுபற்றித் தகவல் வெளியிட்ட அவர், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சீனா மற்றும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக இணக்கப்பாடுகளுக்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகள், சிறிலங்காவின் அபிவிருத்திக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடுகள், நாட்டின் அபிவிருத்திக்கான முக்கிய தூண்களாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *