மேலும்

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையம் – உதவத் தயார் என்று கனடா அறிவிப்பு

canadian-amb-raviசிறிலங்காவில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.

சிறிலங்காவின் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்த கனேடியத் தூதுவர் ஷல்லி வைற்றிங் அம்மையார், இதுகுறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஏனைய தேவையான வசதிகளையும் கனடா வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக கவனத்தை சிறிலங்கா பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளை  பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றை சிறிலங்காவில் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கனேடியத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *