மேலும்

முழுக்குடும்பத்தைச் சிறையிலிட்டாலும் அரசியலை விட்டு வெளியேறமாட்டேன் – மகிந்த சூளுரை

mahinda-meeting (1)தனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் கூட அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பில் ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று நடத்திய ஜன சட்டன என்ற அரச எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” நான் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தேன். எனது மகன் யோசித  41 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறான்.

எனது மூத்த மகன் நாமல் ராஜபக்சவும் சிறையில் அடைக்கப்படலாம். ஆனாலும், மக்களுக்கான எனது குரல் ஓயப் போவதில்லை.

mahinda-meeting (1)mahinda-meeting (2)mahinda-meeting (3)

1930ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் ஈடுபட்டு வரும் ராஜபக்சக்களை அரசியலில் இருந்து யாருமே பலவந்தமாக வெளியேற்ற முடியாது.

பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எது முழுக்குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் கூட, அரசியலில் இருந்து என்னை வெளியேற்ற முடியாது.

நான் கணக்கில் காட்டப்படாத இரகசியக் கடன்களை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.அவ்வாறாயின், கணக்கில் காட்டப்படாத கடன்களை அரசாங்கம் ஏன் திருப்பிச் செலுத்த வேண்டும்?

உங்களால் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் என்னிடம் ஒப்படையுங்கள். நிர்வகித்துக் காட்டுகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *