மேலும்

நாட்டை என்னிடம் தந்தால் நிர்வகித்துக் காட்டுவேன்- என்கிறார் மகிந்த

yoshitha-mahinda (2)தன்னிடம் நாட்டை ஒப்படைத்தால் நிர்வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

யோசித ராஜபக்சவின் பிணை மனு மீதான விசாரணைக்காக கொழும்பு மேல்நீதிமன்றம் வந்திருந்த மகிந்த ராஜபக்சவிடம். அவரது அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநாட்டுக்கடன்கள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னைய அரசாங்கத்தின் கடன்களால்,  வருமானம் முழுவதையும் முன்னைய கடன்களுக்கும் வட்டிக்கும் செலுத்தவே போதுமானதாக இருக்கிறது என்று தற்போதைய அரசாங்கம் குற்றம்சாட்டுகிறதே, என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மகிந்த ராஜபக்ச, அதற்கு நாம் என்ன செய்வது?  எனக்கு வாய்ப்புத் தந்தால், நாட்டை நிர்வகித்துக் காட்டுவேன்” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *