இந்தியா – சிறிலங்கா இடையிலான எட்கா உடன்பாடு – சீனாவும் அக்கறை
இந்தியாவுடன் சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வது தொடர்பாக சீனா அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, கொழும்பு வர்த்தக சம்மேளனத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடன் சிறிலங்கா எட்கா உடன்பாடு செய்து கொண்டால், பெரிய சந்தை வாய்ப்புக் கிடைக்கும் என்று சீனா உணர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், சிங்கப்பூரின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.