சிறிலங்காவுடனான உறவுக்கு உயர் முக்கியத்துவம் கொடுக்கிறது பாகிஸ்தான்
சிறிலங்காவுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் உயர் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக, பாகிஸ்தான் பிரதமரின் வெளிவிவகார சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பதேமி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கான புதிய தூதுவராக சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜெயநாத் லொக்குகேத்தாகொடகேயுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தூதுவரை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமரின் வெளிவிவகார சிறப்பு உதவியாளர் பதேமி, அண்மையில் இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் பேச்சுக்கள் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் பலமடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.
இருதரப்பு ஒத்துழைப்பை புதிய பரப்புக்கு கொண்டு செல்வதற்கும் இது உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.