மேலும்

சிறிலங்காவின் வாக்குறுதிகள் மீது அமெரிக்கா நம்பிக்கை

eagle-flag-usaசிறிலங்கா, பர்மா போன்ற நாடுகளின் வாக்குறுதிகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த நாடுகள் தமது மக்களின் அபிலாசைகளில் பங்கெடுத்து, அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளன.

தமது மனித உரிமை மீறல் மரபுகளுடன் மோதும், சிறிலங்கா போன்ற நாடுகளுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான சவால்களை எதிர்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை இணைந்திருக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *