மேலும்

2015இல் சுமார் 4 இலட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

vote2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 376,412 ஆல் அதிகரித்துள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், 15,044,790 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், 15,421,202 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி புதிதாக 376,412 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பகா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 1,681,887 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அடுத்து, கொழும்பு மாவட்டத்தில் 1,640,946 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 263,201 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து. திருகோணமலை மாவட்டத்தில் 264,368 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், 2015ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *