மேலும்

புதிய அரசியலமைப்பு குறித்து சம்பிக்கவுடன் அமெரிக்கத் தூதுவர் பேச்சு

champika-keshabசிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை வரைவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த சந்திப்பின் போதே இதுகுறித்து இருவரும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் எதிர்கால சுபீட்சம், சக்தி உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்புக்கு அவசியமான திட்டங்கள் குறித்தும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இனம், மதம் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லோருக்கும் சம வாய்ப்பு, மனித உரிமைகளைக் கொண்ட, அமைதியான, வளமான, சமரசமான, ஒன்றுபட்ட சிறிலங்கா என்ற வாக்காளர்களின் பார்வையை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *