மேலும்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சமந்தா பவர்

maithri-samantha (1)மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், சிறிலங்கா அதிபரின் செயலரும், இந்தச் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

maithri-samantha (2)maithri-samantha (1)

samantha maithri (1)samantha maithri (2)

“அதிகாரம்மிக்க பதவிகளுக்கு பெண்கள் வருவதை தமது அரசாங்கம் ஊக்குவிக்கும் நிலையில், சமந்தா பவரின் வருகை சரியான நேரத்தில் இடம்பெற்றது.

அவருடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியானதாக இருந்தது” என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கம், ஜனநாயக மறுசீரமைப்பு, நீதியை நிலைநாட்டுவதில் அர்பப்பணிப்புடன் இருப்பதாகவும் இது நல்லதொரு ஆரம்பம் என்றும், சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *