மேலும்

இந்தியக் கடற்படைத் தளபதி சிறிலங்கா பயணம்

Admiral RK Dhowanஇந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன், நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில் காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே, இந்தியக் கடற்படைத் தளபதி நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

இன்று காலை ஆரம்பமாகவுள்ள இந்த கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் 36 நாடுகளின் 100இற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தக் கருத்தரங்கு, கடல் சார்பாதுகாப்பு ஒத்துழைப்பை மையப்படுத்தியது என்றும், ஆழ்கடல் பாதுகாப்பை பேணும் இந்தியா, இந்தப் பிராந்தியத்தில் முக்கியத்தவம் வகிக்கும் நாடு என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *