முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கொலை வழக்கில் கைது
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பாகவே, சந்தேகத்தின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அவரது மகன், பிரமித தென்னக்கோன், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த போதே, அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.