மேலும்

ரணில் – மோடி சந்திப்பு தொடங்கியது

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

ஹைதராபாத் ஹவுசுக்கு இன்று முற்பகல் 11.30 மணியளவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வந்து சேர்ந்தார்.

அதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரை வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்.

இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இந்தப் பேச்சுக்களில், ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்டோர் பங்கேற்றள்ளனர்.

இந்தியப் பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலர் ஜெயசங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே சின்ஹா ஆகியோரும் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பேச்சுக்களின் முடிவில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *