மேலும்

சிறிலங்கா பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா பேச்சு

ranil-sushma-meet (1)இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதுடெல்லியில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்கியுள்ள தாஜ் பலஸ் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான தூதுவர் வை.கே. சின்ஹா, சவுத்புளொக்கில் சிறிலங்கா விவகாரங்களைக் கையாளும் மேலதிகச் செயலர் சுசித்ரா துரை, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் உள்ளிட்டோர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

ranil-sushma-meet (1)ranil-sushma-meet (2)ranil-sushma-meet (3)

அதேவேளை, சிறிலங்கா பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *