அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மைத்திரியுடன் பேச்சு
அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இன்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
2001ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலராக இருந்தவர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ்.
இந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பேச்சு நடத்திய போது, அதில் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஈடுபாடு காட்டியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்த போது, ரிச்சர்ட் ஆர்மிரேஜ் கொழும்வு வந்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.