மேலும்

மகிந்தவும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

mahinda-naml-mp (1)சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா வரலாற்றில், அதிபராக இருந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.

இன்று நாடாளுமன்ற அமர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பமாகின. அதற்கு முன்னதாக, காலை 9.25 மணியளவிலேயே நாடாளுமன்றத்துக்கு வந்த மகிந்த ராஜபக்ச, முன்வரிசையில் இரண்டாவது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

முதலாவது ஆசனத்தில் நிமால் சிறிபால டி சில்வா அமர்ந்திருந்தார். அதையடுத்து மகிந்த ராஜபக்சவும், அவருக்கு அருகே சரத் அமுனுகமவும் அமர்ந்திருந்தனர்.

mahinda-naml-mp (1)mahinda-naml-mp (2)

சபாநாயகர் தெரிவை அடுத்து, உறுப்பினர்கள் பதவியேற்ற போது, மகிந்த  ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் பதவியேற்றுக் கொண்டனர்.

அதேவேளை, நாடாளுமன்றம் வந்த மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *