மேலும்

நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடப் போவதாக மகிந்த அறிவிப்பு

mahindaநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தாம் பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும், தொடர்ந்து நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ வரலாறு காணாத தடைகளை நாம் எதிர்கொண்ட போதிலும், எமது கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் அளித்துள்ள ஆணையைப் பாதுகாக்கும் வகையில், நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவென்.

நாட்டையும், ஜனநாயக முறைமையையும் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்குள் இருந்து, செயற்படுவேன்” என்று தனது அறிக்கையில் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *