மேலும்

ஆறு மாகாணசபை உறுப்பினர்களை நீக்கியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

upfa-ralley-anuradhapura (2)ஹிருணிகா பிரேமச்சந்திர, நிசாந்த சிறிவர்ணசிங்க உள்ளிட்ட ஆறு மாகாணசபை உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நீக்கியுள்ளதாக, அதன் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த அறிவித்துள்ளார்.

தென் மாகாணசபை உறுப்பினர் அந்தோனிகே ஹேவா பியசேன, ஊவா மாகாணசபை உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், ஹரீந்திர தர்மதாச பண்டா, மேல்மாகாணசபை உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர, நிசாந்த சிறிவர்ணசிங்க, நிரோஷா அத்துகோரள ஆகிய நால்வருமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் மாகாணசபை உறுப்பினர் பதவியை நீக்குவது தொடர்பான கடிதம் சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாக மாகாணசபையில் இருக்க முடியாது என்றும் இவர்களுக்குப் பதிலாக அடுத்த நிலையில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கான தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் நாள் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *