மேலும்

மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்

mahindaஅரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவுள்ள மக்களை நம்பிக்கையிழக்கச் செய்வதற்கான பொய்யான பரப்புரை என்று அவர் பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெற்றி பெற்று பிரதமராக வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்து அவரை கௌரவமாக அரசியலில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறு ராஜபக்ச குடும்பத்தினரின் சார்பில், கோத்தாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்தக் கோரிக்கைக்கு சிறிலங்கா அதிபர் சாதகமான பதிலை அளிக்கவில்லை என்றும் ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *