மேலும்

திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை

trinco-bishop (2)திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், திருகோணமலை மறை மாவட்டத்தின் ஓய்வு பெறும் ஆயர் வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, புதிய ஆயராக வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையை திருநிலைப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் கத்தோலிக்க குருமார், அரச, படை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

trinco-bishop (1)

trinco-bishop (3)

trinco-bishop (4)trinco-bishop (5)

trinco-bishop (2)

trinco-bishop (6)

திருகோணமலை மறைமாவட்ட ஆயராக இருந்த, வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், புதிய ஆயராக, வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை, பாப்பரசரால் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் நன்றியுடன் – எஸ்.எஸ்.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *