மேலும்

நாளை மாலைதீவு செல்கிறார் சிறிலங்கா அதிபர்

maithri-depature-chinaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மாலைதீவின் தேசிய சுதந்திர நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமின் அப்துல்லா கயூமுடன், சிறிலங்கா அதிபர் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.

அத்துடன் மாலைதீவின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தித்து அவர் பேச்சு நடத்துவார்.

நாளை மறுநாள் சிறிலங்கா அதிபர் நாடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற பின்னர், சார்க் நாடுகளில் ஒன்றான மாலைதீவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *