மேலும்

ஜூலை 17 இல் அனுராதபுரத்தில் மைத்திரிக்கு பதில் – என்கிறார் மகிந்த

mahinda-press (2)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில்  பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்த ராஜபக்சவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும் கூட, அவரைப் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்றும் நேற்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.்

இந்தநிலையில் கொழும்பில், டார்லி வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மகிந்த ராஜபக்சவிடம், மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

mahinda-press (2)

அதற்கு மகிந்த ராஜபக்ச,  ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில் பதிலளிக்கப்படும், அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிலளித்து விட்டுச் சென்று விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *