விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் செயற்படுகிறதாம் – அமெரிக்கா கூறுகிறது
சிறிலங்கா படைகளால், 2009ஆம் ஆண்டில், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் அனைத்துலக நிதி மற்றும் ஆதரவாளர்களின் வலையமைப்பு தொடர்ந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு நேற்று வெளியிட்ட, தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
என்றாலும், 2014ஆம் ஆண்டில், மலேசியாவில் வைத்து 13 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர், இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.” என்றும் அமெரிக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.