சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரிகள் தலைமையகத்தின் இராணுவப் பயிற்சித் திணைக்கள அரசியல் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செங் ஜியாங் தலைமையிலான ஆறு இராணுவ அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இவர்கள், சீனாவின் நிதியுதவியுடன் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் கட்டப்பட்டு வரும், கட்டத்தொகுதி தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காகவே சிறிலங்கா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.