மேலும்

Tag Archives: இராணுவ அதிகாரி

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதானது, அனைத்துலக  சமூகத்தின் ஆதரவை இந்த அரசாங்கம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது என சிறிலங்காவின்  முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முகநூலில் இனக்குரோத பரப்புரை – சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

முகநூல் மூலம் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இருந்து ‘பாதுகாக்கப்பட்ட’ சிறிலங்கா படையினர் – ஏபி

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜுதீன் கொலை வழக்கில், மகிந்தவின் சாரதியான இராணுவ அதிகாரி கைதாகிறார்

சிறிலங்கா ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

பிரகீத் கடத்தலில் இராணுவத்தின் தொடர்பு – பதிலளிக்க மறுத்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாடடுகள் தொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி.

பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரகீத் கடத்தலில் திடீர் திருப்பம் – முக்கிய தகவல்களை வெளியிட்டார் இராணுவ அதிகாரி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரும், கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

இராணுவ இராஜதந்திரிகளுக்கு மைத்திரி அரசும் பச்சைக்கொடி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்ட, 16 பேரை உடனடியாக நாடு திரும்ப புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.