சிறிலங்காவுடன் நிலையான இராணுவ உறவை விரும்புகிறதாம் சீனா
சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் நிலையானதுமான இராணுவ உறவுகள் தொடர வேண்டும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவை, பீஜிங்கில் இன்று சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படையினருக்குப் பயிற்சிகளை அளித்தல் உள்ளிட்ட, துறைகளில் சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் ஆழமானதுமான இராணுவ உறவுகளைப் பேணுவதற்கு விரும்புகிறோம்.
இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையில் தொமடர்ச்சியான நிலையான உறவுகளை விருத்தி செய்வதற்கு சிறிலங்காவுடன் இணைந்து கடுமையான உழைப்பதற்கு சீனா விரும்புகிறது.
இந்த விடயத்தில் சாதகமான நகர்வுகள் மேலும் உறவுகளை ஆழப்படுத்தும்.” என்றும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.