மேலும்

மாதம்: February 2015

பேராசிரியர் றொகான் குணரத்னவுக்கு ஒரு பதிலடி

கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா? இவ்வாறு பேராசிரியர் றொகான் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பொருளியல் நிபுணரும், ஆய்வாளருமான கலாநிதி முத்துகிருஸ்ண சர்வானந்தா.

யாழ்ப்பாணமும் செல்கிறார் ஐ.நா உயர் பிரதிநிதி

சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள, ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைவான் கடத்தல்களில் ஈடுபட்டது இராணுவ அதிகாரிகளே- முன்னாள் காவல்துறை பேச்சாளர்

வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகள், பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு

இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லா நாடுகளுடனும் சுமுக உறவு – இதுவே தமது வெளிவிவகாரக் கொள்கை என்கிறார் மைத்திரி

தமது அரசாங்கம் தொடர்ந்தும் அணிசேரா கொள்கையையே கடைப்பிடிக்கும் என்றும், எல்லா நாடுகளுடனும், சுமுகமாக உறவுகளைப் பேணும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் கோத்தா – முன்னாள் காவல்துறை பேச்சாளர் பரபரப்பு செவ்வி

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கொலை அச்சுறுத்தலினால் தான், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சிக்காலத் திட்டங்களின் இன்றைய நிலை – ஏஎவ்பி

அம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர் செலவில் மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன.

சபதத்துடன் சிறிலங்கா வந்துள்ள புதிய சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை இறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தொடரப் போவதாக சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இன்று புறப்படுகிறார் மங்கள சமரவீர

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை இன்று சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் கடந்த மாதம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், உயர்மட்ட அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.