மேலும்

மார்ச் 2ம் நாள் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர

mangala-Carnegie-Speechசிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு வரும் 2ம் நாள் தொடக்கம், 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

வரும் மார்ச் 2ம் நாள், பேரவையில் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அமர்வு நடைபெறவுள்ளது.

இதில் 65 நாடுகளில் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்நிலைப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்லவுள்ளார்.

இதன்போது, அவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *