மேலும்

அகதிகளை திருப்பி அழைப்பது குறித்து இந்திய – சிறிலங்கா பேச்சுக்கள் வெள்ளியன்று ஆரம்பம்

India-srilanka-Flagஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவும் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அகதிகளை திருப்பி அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதையடுத்தே,வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இருதரப்புப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கப்படும் அகதிகளுக்கான மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு  நடவடிக்கைகளுக்கு உதவ, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதேவேளை, திருப்பி அனுப்பப்படும் அகதிகளுக்கு உதவிகளை வழங்குவது குறித்து இந்திய அரசாங்கமும் ஆராய்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *