மேலும்

உயர்நீதிமன்றம் வந்தார் சிராணி பண்டாரநாயக்க – குழப்பத்தில் சிறிலங்கா நீதித்துறை

shiraniசிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் பொறுப்பேற்பதற்காக – முன்னைய அரசாங்கத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 43வது பிரதம நீதியரசர்  சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு தற்போது வருகை தந்துள்ளார்.

அதேவேளை, 44வது பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் இன்னமும் பதவியில் இருந்து விலகாத நிலையில், சிராணி பண்டாரநாயக்க பதவியேற்றால், நாட்டின் வரலாற்றில் இரண்டு பிரதம நீதியரசர்கள் பதவியில் இருக்கும் நெருக்கடியான நிலை ஏற்படும்.

தற்போதைய பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவியில் இருந்து விலகுமாறு சட்டத்தரணிகளும், சிவில் சமூகமும், அரசாங்கமும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

ஆனால், அவர் இன்னமும் பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார்.

shirani

தாம் பதவி நீக்கப்பட்டது தவறானது என்று அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலும், சட்டத்துக்கு முரணாக தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும், தாமே தொடர்ந்தும் சட்டரீதியான பிரதம நீதியரசராக இருப்பதாக சிராணி பண்டாரநாயக்க இன்று காலை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் மீண்டும் பதவியைப் பொறுப்பேற்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளார்.

ஏற்கனவே அவர் பதவியேற்றவர் என்பதால், சிறிலங்கா அதிபர் முன்பாக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளத் தேவையில்லை என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று மதியம் உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்த சிராணி பண்டாரநாயக்கவுக்கு சட்டத்தரணிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *