மேலும்

ஒரு நாள் மட்டும் பிரதம நீதியரசராக இருப்பார் சிராணி பண்டாரநாயக்க

shiraniசிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் ஒப்படைப்பார் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தினால் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தவறானது என்றும், சட்டரீதியான பிரதம நீதுியரசராக  அவரே நீடிப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரி மைத்திரிபால சிறிசேன நேற்று சிராணி பண்டாரநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அத்துடன், சட்டமுறையற்ற வகையில், சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டதால், அவரே சட்டரீதியான பிரதம நீதியரசர் என்றும், எனவே மொகான் பீரிசை இலங்கையின் பிரதம நீதியரசராகத் தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது என்றும் 44வது பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இதனடிப்படையில், சிராணி பண்டாரநாயக்க இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கு வந்து, பிரதம நீதியரசராகப் பொறுப்பேற்றார்.

எனினும், சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என்றும், இதையடுத்து புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *