தோல்வியை ஒப்புக் கொண்டு அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் மகிந்த
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியை ஒப்புக் கொண்டு இன்று காலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இன்று காலை ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து, அடுத்த கட்ட அரசியல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கூறிய மகிந்த ராஜபக்ச, அலரி மாளிகையை விட்டு வெளியேறியதாக அவரது ஊடக இணைப்பாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.