மேலும்

Tag Archives: மத்தல

இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே மத்தலவுக்கு புதுவாழ்வு

மத்தல விமான நிலையத்தை, கூட்டு முயற்சியாக, அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் மூன்றாவது வாரத்தில், சிறிலங்கா பிரதமரின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவிருந்த மகிந்த

அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும், சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்று, தென்மாகாண அமைச்சர் எச்.டபிள்யூ.குணசேன தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமானது – மகிந்த எச்சரிக்கை

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமான விடயம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 28 பேர் கைது

அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிரணியினரை சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், கலைத்தனர்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்

அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி எச்சரித்துள்ளது.

இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது – இந்தியாவுக்கு சிறிலங்கா நிபந்தனை

மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்தல விமான நிலைய அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச அமைச்சரவை உபகுழு

மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை எவ்வாறு சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையம் இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ளது – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம்இந்தியாவிடம் கையளிக்கவுள்ளதாக கூட்டு எதிரணி் குற்றம்சாட்டியுள்ளது.