மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்
மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
அம்பாந்தோட்டையில் முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில், யால போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.