மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழப்பு

Hambantota harborமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் மூலம் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா (147 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம், 175 பில்லியன் ரூபாவை செலவிட்டிருந்தது. இதற்காக சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடனுக்கு வரிசெலுத்துவோர் வட்டியை செலுத்தி வருகின்றனர்.

வடிவமைத்து, கட்டியமைத்து பரிமாற்றம் செய்தல் என்ற அடிப்படையில் இந்த துறைமுகத்தை சீன அமைத்துக் கொடுத்திருந்தது.

இந்த துறைமுகத்தின் 80 வீத உரிமையை 1 பில்லியன் டொலருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதன்படி, 37.2 பில்லியன் ரூபா ( 253 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்படும்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்ட மத்தல விமான நிலையமும் ஆண்டுக்கு 5.9 பில்லியன்  ரூபா இழப்பைச் சந்தித்து வருவதாக நிதியமைச்சின் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை அமைப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 27.5 பில்லியன் ரூபா (187 மில்லியன் டொலர்) கடனைப் பயன்படுத்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *