மத்தல விமான நிலையம் இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ளது – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு
அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம்இந்தியாவிடம் கையளிக்கவுள்ளதாக கூட்டு எதிரணி் குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, “மத்தல விமான நிலையத்தின் 40 வீத பங்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு, எஞ்சிய 60 வீதம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இரகசிய உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
நாட்டின் தேசிய சொத்துக்களை இந்த அரசாங்கம் ஒவ்வொன்றாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.