புதிய தேசிய பாதுகாப்புத் திட்டத்துக்கு வெளிநாட்டு ஆலோசனை – பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் ஆராய்வு
முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரால் வரையப்படும் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.