மேலும்

Tag Archives: பாகிஸ்தான்

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாயட் பாஜ்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பாகிஸ்தானில் சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அங்கு அனைத்துலக கடல்சார் மாநாட்டிலும், கூட்டு பயிற்சியை மேற்பார்வையிடும் நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.

சீனாவிடம் ஆறு பயிற்சி விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படைக்கு,  பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.

கூட்டுப் பயிற்சி: இந்தியா – சிறிலங்கா இடையே விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு

கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவுடன், இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவில் 26,615 சிறிலங்கா அகதிகளுக்கு யுஎன்எச்சிஆர் அனுமதி

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு 26,615 சிறிலங்கா அகதிகளுக்கு,  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ( யுஎன்எச்சிஆர் )அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நௌரு, மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்?

அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிரவாத முறியடிப்பு தொடர்பாக சிறிலங்கா படையினர் பாகிஸ்தானில் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு இராணுவத்தினர் இணைந்து, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான முத்தரப்பு இராணுவப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க முதல்முறையாக சிறிலங்காவுக்கு அழைப்பு

ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின், 2016ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சுவிற்சர்லாந்து செல்லவுள்ளார். இந்த மாநாடு சுவிற்சர்லாந்தின், டாவோஸ் நகரில் வரும் 20ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவின் திட்டத்தை முடங்கிய இந்தியா – வெள்ளைத் தாளில் வந்த வில்லங்கம்

இந்தியாவின் எதிர்ப்புகளை அடுத்து, பாகிஸ்தானிடம் ஜே.எவ்.-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம், தற்போதைக்காவது கைவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.