கூட்டுப் பயிற்சி: இந்தியா – சிறிலங்கா இடையே விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு
கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவுடன், இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்னாம், ஓமான் ஆகிய ஆறு நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளது.
மேலும், சிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.