மேலும்

Tag Archives: சி.வி.விக்னேஸ்வரன்

வட,கிழக்கிற்கு வழங்கவிருந்த கூடுதல் அதிகாரங்களை ஜே.ஆரே நீக்கினார் – ப.சிதம்பரம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான, ப.சிதம்பரம், நேற்று யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டாவது நாளை எட்டியது 217 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சிறிலங்காவில் நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்,  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது.

ஈனச்செயல்களே சிறிலங்கா அரசை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது – சி.வி.விக்னேஸ்வரன்

எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சம்பந்தன் – விக்னேஸ்வரன் விரைவில் சந்திப்பு – கருத்து முரண்பாடுகள் குறித்து பேசுவர்

நாடாளுமன்றத் தேர்தலின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும், அவர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக, அவருடன் தாம் நேரில் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக பொறிமுறை – வட மாகாணசபையில் தீர்மானம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்டுள்ளது.

வாக்காளர்களைக் குழப்பியுள்ளார் விக்னேஸ்வரன் – ‘தினக்குரல்’ ஆசிரியர் கருத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நடுநிலைமை – கூட்டமைப்பின் பதில் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.

விக்னேஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவோம் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தனது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார்.