போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக பொறிமுறை – வட மாகாணசபையில் தீர்மானம்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்டுள்ளது.
இன்றுகாலை ஆரம்பமான வடக்கு மாகாணசபையின் 34 ஆவது அமர்வில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வழிமொழிந்தார்.
அதேவேளை, இந்த தீர்மானத்தின் உள்ளடக்கத்தை வாசித்து விளங்கிக் கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கால அவகாசம் கோரியுள்ளார்.
இதையடுத்து, இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் வாசித்து விளங்கிக் கொள்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
பின்னர், இன்று பிற்பகல் இந்த தீர்மானம் அவையில் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது.