மேலும்

Tag Archives: சி.வி.விக்னேஸ்வரன்

திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல்தீர்வே தேவை – விக்னேஸ்வரன்

மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு  அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் உலக வங்கி அதிகாரிகளைச் சந்தித்த விக்னேஸ்வரன் – கொழும்பில் சர்ச்சை

அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கு உலக வங்கி அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை சொல்லாட்சியை மென்மைப்படுத்துமாறு விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா போதனை?

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளை நினைவு கூர்ந்தாராம் விக்னேஸ்வரன் – ஞானசார தேரர் கூறுகிறார்

நீதிமன்றம் விதித்த தடைஉத்தரவை மீறி, விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

போர்க்குற்றமிழைத்த சிறிலங்கா படையினரை எம்மண்ணில் ஆளவிட முடியாது – முதலமைச்சர்

போர்க்குற்றமிழைத்த சிறிலங்கா இராணுவத்தினரைத் தொடர்ந்து எம் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆளவிடுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆறு ஆண்டுகளாகியும் உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை – விக்னேஸ்வரன் உரை

போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையான- நம்பகமான-  ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்படாமை,தமிழ்மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

மே 18இல் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் மரணமான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளை மறுநாள்- மே 18ம் நாள், நடைபெறவுள்ளது.

ஜோன் கெரிக்கு ‘வீட்டுவேலை’ கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளித்த ஆவணத்தை வாங்கிப் பார்த்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தனக்கு நிறைய வீட்டு வேலை தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.