மேலும்

இன்று மாலை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கவுள்ளது.

குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நேற்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்

சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்

வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது, அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதி தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐதேமு அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தார்மீக உரிமையை இழந்து விட்டது கூட்டமைப்பு – டலஸ்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து விட்டது என்று, மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பிரேரணையை நிராகரிக்கிறது மகிந்த அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிராகரித்துள்ளது.

ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை

புராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.